யார் வெளியே சென்றாலும் கவலையில்லை – சிறிலங்கா அரசு கூறுகிறது
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு எவர் வேண்டுமானாலும் வெளியே போகலாம் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
யார் அரசாங்கத்தை விட்டு வெளியே சென்றாலும் அரசாங்கத்தினதோ, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினதோ உறுதிப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இப்போதைய நிலையில் கூட, வரப்போகும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜாதிக ஹெல உறுமய, சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு வெளியேற எடுத்த முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்ளுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.