ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்- பீரிஸ் விசனம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்,
“ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக சிறிலங்காவின் மீது. செயிட் ராட் அல் ஹுசேனின் பணியகம் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
ஆனால், ஏனைய நாடுகளுக்கு அதுபோன்று அழுத்தங்கள் கொடுக்கப்படுவதில்லை.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேறும் சில நாடுகள் மறுத்துள்ளன.
அந்த நாடுகளின் மீது எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படுவதில்லை. இது இரட்டை நிலைப்பாடாகும்.
எல்லா நாடுகளையும் ஐ.நா சமமாக நடத்த வேண்டும்.
ஐ.நா விசாரணையில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் ஒழுங்கீனங்கள் குறித்து விபரிப்பதற்காக சில நாடுகளின் தூதுவர்களை நாளை கூட்டம் ஒன்றுக்கு அழைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.