ஆட்சிக்கு வந்தால் சீனாவைப் புறந்தள்ளுவோம் – ஐதேக எச்சரிக்கை
தாம் ஆட்சிக்கு வந்தால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துடன், சீன நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள உடன்பாடுகள் செல்லுபடியற்றதாகி விடும் என்று ஐதேக எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில், நேற்று உரையாற்றிய ஐதேக உறுப்பினர் ரவி கருணாநாயக்க,
பிரதான திட்டங்களின் ஊடாக சீனாவுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தியாவை புறந்தள்ள நாம் அனுமதிக்கமாட்டோம்.
சிறிலங்காவில் சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டியை உருவாக்கிவிட சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
சீனாவுடன் சட்டரீதியற்ற உடன்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.