மேலும்

முல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.

நேற்றுக்காலை கரைத்துறைப்பற்று  பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகிய சாட்சியங்கள் சேகரிக்கும் அமர்வில், 57 முறைப்பாடுகள் குறித்து சாட்சியமளிக்க உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், 42 பேர் மட்டுமே, இந்த அமர்வில் சாட்சியமளித்தனர்.

அதேவேளை, இரண்டு புதிய முறைப்பாட்டாளர்களிடம் இருந்தும் சாட்சியங்களை ஆணைக்குழு பெற்றுக் கொண்டுள்ளது.

காணாமற்போனோர் குறித்து நேற்று புதிதாக 18 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் தொடர்ந்து சாட்சியப் பதிவு இடம்பெறவுள்ளது.

நாளையும் மறுநாளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் சாட்சியப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நான்கு நாட்களிலும், 231 முறைப்பாடுகள் குறித்து சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக, காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *