மேலும்

Tag Archives: ஆணைக்குழு

மத்திய வங்கி பிணை முறி மோசடி – இன்று அல்லது நாளை அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி  தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பதிகாரிகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும், சிறிலங்கா காவல்துறைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளின் ஒரு பகுதியாக, ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

தமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானிய சட்ட நியமச் சபை விசாரணை

சிறிலங்காவில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானியாவின் சட்ட நியமச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட புதிய குழு நியமனம்

காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.

நேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் தொடங்கியது விசாரணை – வியாழன் வரை தொடர் நெருக்கடி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போது சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினுள் தரையில் அமர்ந்து போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.