மேலும்

Archives

மாலிக்கு அனுப்பப்படவுள்ள சிறிலங்கா படையினர் குறித்து ஐ.நா அதிகாரிகள் பேச்சு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும், அமைதிப்படையினருக்கான பயிற்சிகள் தொடர்பாகவும், ஐ.நா அதிகாரிகள் நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி

சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர்

சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.

ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்த வானிற்குள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் ஊடகவியலாளர் கூறினார்.

தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தார் அமெரிக்க தூதுவர்

அண்மையில் சிறிலங்காவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.

எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் – மகிந்தவை உசுப்பேற்றிய ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்

எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் என்று, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ எனப்படும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான, லெப்.ஜெனரல் றிஸ்வான் அக்தர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, உறுதியளித்துள்ளார்.

மாவையைச் சந்தித்தார் முதலமைச்சர் – கூட்டாகச் செயற்படுவதற்கு இணக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்று முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.