மேலும்

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்றுக்காலை இடம்பெற்றது.

இதன்போது, மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரும்,  தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.

அந்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *