மேலும்

Tag Archives: ஜப்பான்

அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு,  திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும்,  சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும்,  சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வியட்னாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளார்.

குப்பை மேடு சரிந்த சம்பவம் – மீட்புப் பணிக்கு நிபுணர்களை அனுப்புகிறது ஜப்பான்

கொலன்னாவ – மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்து வீடுகள் புதைந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நிபுணர் குழுவொன்றை ஜப்பான் அனுப்பவுள்ளது.

சீனாவை எதிர்கொள்வதற்கு சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது.

சிறிலங்காவுக்கான சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்

சிறிலங்காவில் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பிரதிநிதி ஒருவரை ஜப்பான் நியமிக்கவுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யொஷிஹிடே சுகா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சிறிலங்கா பிரதமர்- இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்

ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார்.

நாளை மறுநாள் ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஏப்ரல் 10ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை  கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.

அம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படைக் கப்பல்

சிறிலங்காவில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.