மேலும்

குப்பை மேடு சரிந்த சம்பவம் – மீட்புப் பணிக்கு நிபுணர்களை அனுப்புகிறது ஜப்பான்

japan flagகொலன்னாவ – மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்து வீடுகள் புதைந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நிபுணர் குழுவொன்றை ஜப்பான் அனுப்பவுள்ளது.

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு வீடுகளுக்கு மேல் சரிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இன்றும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *