மேலும்

Tag Archives: சட்டமா அதிபர்

சிறிலங்கா புலனாய்வு தலைவரைத் திணறடித்த ஐ.நா நிபுணர்கள் – பிணையெடுத்தார் சட்டமாஅதிபர்

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் வழக்கில் ஹிருணிகாவைக் கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பபவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைது செய்ய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பிணை வழங்கப்பட்ட ஒருவர் மட்டுமே விடுவிப்பு – எஞ்சியோர் சிறைக்குள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டனர்.

32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி

இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிணை வழங்குவது அரசியல்வாதிகளின் வாக்குறுதியாம் – கைவிரித்தது சட்டமா அதிபர் திணைக்களம்

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுவிப்பதாக அரசியல்வாதிகளே வாக்குறுதி வழங்கியதாகவும், அதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் கைவிரித்துள்ளார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.

32 தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுநாள் விடுதலை – விஜேதாச ராஜபக்ச அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 தமிழ்க் கைதிகள் நாள் மறுநாள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாகவே விடுவிக்கப்படுவர் – விஜேதாச ராஜபக்ச

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரேயடியாகப் பொது மன்னிப்பு அளிக்கப்படாது என்றும், அவர்கள் கட்டம் கட்டமாகவே விடுவிக்கப்படுவர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.