மேலும்

Tag Archives: கொழும்பு

கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபரின் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் சிறிலங்கா உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய மேம்பாலத்துக்கு சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு சிறிலங்கா அதிபர் பணிப்பு

ராஜகிரிய மேம்பாலத்துக்கு வண. மாதுளுவாவே சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே,  வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

40 ஆண்டுகளில் சிறிலங்காவின் கையில் கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு கொடுப்பனவு

நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமருக்கு மிகப் பெருமளவு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 ஆண்டு குத்தகை உரிமையைப் பெற்றுக் கொண்ட சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற சீன நிறுவனமே, சுமார் 292 மில்லியன் டொலருக்கான காசோலையை வழங்கியுள்ளது.

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த ஆப்பு?

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று  சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.