மேலும்

Tag Archives: அமைச்சரவை

அமெரிக்கா குறித்த அமெரிக்க அறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான விடயமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தல்முறை மாற்றம் – மைத்திரியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை சிறப்பு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கின் தேர்தல் தொகுதிகள் பறிபோகாது – பிரதான கட்சிகள் இணக்கம்

சிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.

19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.