மேலும்

அமெரிக்கா குறித்த அமெரிக்க அறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்

g.l.peirisவிடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான விடயமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அபயராமய விகாரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி, இரண்டாவது தடவையும் அதேபொறியில் அரசாங்கம் விழுந்து விடக் கூடாது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஆதரவாளர் வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் தலைமையில் அமைச்சரவையின் விசேட கூட்டம் நடத்தப்பட்டு ஆராயப்படும் என்று நம்புகிறோம்.

ஆனால் இன்னமும் அமைச்சரவை கூட்டப்படவில்லை” என்றும் அவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *