மேலும்

Tag Archives: ஜெனிவா

சிறிலங்காவுக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம்

போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு, சிறிலங்காவுக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய கடைசி நேரத்தில் சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பரணகம ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான – காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்கான அதிபர் ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும்  அதனைக் கலைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

ஐ.நா தீர்மானம் வலுவான அனைத்துலகத் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

சிறிலங்காவில் போரின் போது, இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறை, வலுவான அனைத்துலகத் தலையீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அமைய வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன்,  நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஜெனிவாவில் ஆதரவு திரட்டும் அமெரிக்கா – அதுல் கெசாப்பும் ஜெனிவா விரைவு

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு, உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்துகிறது அமெரிக்காவின் தீர்மான வரைவு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா அறிக்கை: முடிவல்ல, ஆரம்பம் தான் – என்கிறார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில்.

இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.