மேலும்

Tag Archives: ஜெனிவா

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர முயற்சிக்கிறாராம் ரணில்- இந்தியாவிடம் வாக்குறுதி

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானம் கொண்டு வருவோம்- அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உண்மை ஆணைக்குழுவை அமைக்கப் போகிறதாம் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள வாக்குறுதி

சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.

விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நிபந்தனையுடன் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை

ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

ஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்காவிடம் கையளிப்பு – அடுத்தவாரம் பகிரங்கமாகும்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.