மேலும்

Tag Archives: ஜெனிவா

ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் மைத்திரியும் பங்கேற்கிறார்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார்.

மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது

பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெனிவா கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்புக்குழு செல்லாது

ஜெனிவாவில் அடுத்தமாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர்

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு

சிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பங்கு – ஜோன் கெரி பாராட்டு

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார். இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

ஜெனிவாவுக்கான புதிய இந்தியப் பிரதிநிதியாக அஜித் குமார் நியமனம்

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், தூதுவராகவும், அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.