மேலும்

Tag Archives: ஜெனிவா

விவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.

விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவத்தினருக்கு கோத்தா உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது சட்டவிரோதம் – சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்கு, ஜெனிவா தீர்மானம் காலஅவகாசத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதே சிறிலங்கா அரசின் பிரதான இலக்காம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு நியூசிலாந்தும் இணை அனுசரணை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்தும் அறிவித்துள்ளது.

நடக்கப் போவது கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? – சுமந்திரன் உரை – பாகம் 1

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை.

ஜெனிவா தீர்மானம் – மீளிணக்கப்பாட்டின் தொடக்கப் புள்ளியாகுமா?

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானம் இராஜதந்திர வெற்றியல்ல – என்கிறார் மகிந்த

ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது, சிறிலங்காவுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துடன் தன்னால் உடன்பட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

மின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.