மேலும்

Tag Archives: ஜெனிவா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் காலஅவகாசத்துடன் நிதி உதவியையும் கோரவுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 24 மாத கால அவகாசத்தையும், நிதி உதவியையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து கொண்டு செல்வதாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக மீளாய்வு

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டத்தொடரில், சிறிலங்காவின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா? – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது சிறிலங்கா

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

சுவீடன் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் – ‘ஜெனிவா’வே இலக்கு?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் தடுத்து வைக்கப்படவில்லையாம் – சிறிலங்கா கூறுகிறது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா குழுவின் விசாரணைகளால் திணறிய சிறிலங்கா பிரதிநிதிகள்

சிறிலங்கா இராணுவம், காவல்துறையினால் இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்படும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நேற்று கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது – ஐ.நா குழு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.