மேலும்

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும்,  தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார்.

விசாரணைகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

“ரணில், நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோரை விசாரியுங்கள். ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள். வழக்குகளைத் தாக்கல் செய்து தீர்ப்புகளைப் பெறுங்கள். சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துங்கள்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியை நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமுல்படுத்துவது  முக்கியம்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மீது  பல முறைப்பாடுகள் தற்போது  குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக  உள்ளன,  அவை தாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும்.

நூற்றுக்கணக்கான கோடி இழப்புகளை ஏற்படுத்தி, மின் உற்பத்தி நிலையங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் தரமற்ற நிலக்கரியை கப்பல்களில் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

ஜேவிபி எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த கேள்விப்பத்திர செயல்முறைக்கு அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, சபாநாயகரின் பல வீடுகள், வாகனங்கள், கொடுப்பனவுகள் மற்றும் நெறிமுறை நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டி ஆட்சி செய்ய முடியாது.

உங்கள் சொந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும். நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும். பொறுப்புக்கூறலை நிலைநிறுத்தவும்,” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *