கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.