யாழ். மாவட்டத்தில் இரண்டு சபைகளில் ஆட்சியமைத்தது தமிழ் அரசு
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று தவிசாளர் தெரிவு இடம்பெற்ற மூன்று உள்ளூராட்சி சபைகளில் இரண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று தவிசாளர் தெரிவு இடம்பெற்ற மூன்று உள்ளூராட்சி சபைகளில் இரண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
செம்மணியில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்பு எச்சங்கள் அடங்கிய ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வணிக நோக்கங்களுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர், விமானங்கள் இல்லாததால் இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாக டெல் அவிவ்வில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிக்கான பயணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னிறுத்தப்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் விரைவாகச் செயற்படவில்லை என, அனுசணை நாடுகள் குழு தெரிவித்துள்ளது.
மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு மனித புதைகுழிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.