மேலும்

பிரிவு: செய்திகள்

ஜப்பானிய பாதுகாப்பு உதவிகள் – இன்னமும் இணக்கம் ஏதும் இல்லையாம்

ஜப்பானிடம் இருந்து பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.

வோல்கர் டர்க் எங்கும் செல்லலாம்- யாரை சந்திக்கவும் தடையில்லை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவில் எங்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியழித்தது அமெரிக்கா

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஐ.நா ஆய்வுக்கப்பல் விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு வரும்

ஐ.நா கொடியுடன் இயங்கும் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஆய்வுக்கப்பல் விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக  மாத்திரமே கொழும்பு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மயிலிட்டியில் நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள  தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சிறிலங்காவின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா பயணம்

சிறிலங்காவின்  15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவுக்கு பாதுகாப்பு உதவிகளை விரிவுபடுத்தியுள்ள ஜப்பான்

ஜப்பான் இந்த ஆண்டு அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவிகளை- சிறிலங்கா உள்ளிட்ட மேலும் ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துகள் குறித்து விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான- ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும்- ரணில்

ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிந்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வர திட்டம்

இந்தியாவின் கேரள மாநில கடற்கரைக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த வான் ஹாய் 503 (Wan Hai 503) என்ற கொள்கலன் தாங்கி கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.