மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவார் மைத்திரி – ராஜித சேனாரத்ன

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு வழங்கமாட்டார் என்றும், ஆனால், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளைப் பலப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

புலிகளுக்கு நிதி திரட்டிய 10 பேருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின்  குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சந்திரிகா கோரிக்கை

நியாயமான, நீதியான தேர்தல் நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைக்கைதிகளையும் விட்டுவைக்காத சிறிலங்கா அரசு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு, அரசாங்க வளங்களை மட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ள கைதிகளையும் பயன்படுத்தி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க

2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.

எதிரணி மீது கோத்தா ஆவேச பாய்ச்சல்

தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுக்களில் சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சர் குத்துக்கரணம் – அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வரவில்லையாம்

அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு, அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயற்சிக்கவில்லை என்று, குத்துக்கரணம் அடித்துள்ளார், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.