மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

வெளிநாடுகளுக்கு செல்லும் சிறிலங்கா காவல்துறையினருக்கு வருகை நுழைவிசைவு

வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் சிறிலங்கா காவல்துறையினருக்கு, அந்தந்த நாடுகளில் வருகை நுழைவிசைவை வழங்கும் வகையில், அனைத்துலக காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

கொள்ளையர்களிடம் உடமைகளைப் பறிகொடுத்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதியுமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரேசிலில் கொள்ளையர்களிடம் சிக்கி தனது உடமைகளை இழந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீளாய்வு – சீனாவுக்கான நிலஉரிமை பறிப்பு

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதில் 20 ஹெக்ரெயர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட பல உட்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து சமந்தா பவருடன் விஜேதாச ராஜபக்ச பேச்சு

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொண்டுள்ளமை, இன்னும் கூடுதலான பொறுப்புக்கூறலை நோக்கிய அதன் இன்னொரு அடி என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் கையளிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை இழக்கிறது அமெரிக்கா – பாகிஸ்தானும் தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி வந்த அமெரிக்கா, வரும் டிசெம்பர் மாதத்துடன் உறுப்பு நாடு என்ற தகைமையை  இழக்கவுள்ளது.

இழுபறியில் 2ஆவது சீன – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

இரண்டாவது சீன – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், அடுத்த ஆண்டின் முன் அரையாண்டு பகுதியிலேயே இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் – சீனாவுடன் போட்டியில் குதிக்கிறது இந்தியா?

கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில், இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார் துறைறைச் சேர்ந்த துறைமுக நிறுவனங்களை ஈடுபடுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக புதுடெல்லி அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பில் பாகிஸ்தான் அமைத்துள்ள உருது மொழிப் பயிற்சி நிலையம் – ஹிந்திக்கு போட்டி?

சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், உருது மொழிப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், இது இலங்கையில் ஹிந்தி மொழியை பரப்பும் இந்தியாவின் திட்டத்துக்குப் போட்டியான நடவடிக்கையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.