மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மைத்திரியின் சீனப் பயணத்தின் போது சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து முக்கிய பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.

தென்னந்தோட்டத்தில் ஒளிந்திருந்த மைத்திரி – மகிந்தவிடம் இருந்து தப்பியது எப்படி?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் குடும்பத்துடன் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தொடங்கஸ்லந்தை பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில், தேர்தல் நாளன்று இரவு முழுவதும், ஒளிந்திருந்துள்ளார்.

அழுத்தங்கள் கொடுத்தாலும் செப்ரெம்பரில் அறிக்கை வெளியாகும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, விசாரணை அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் பிரிவினைப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக சிறிலங்கா தூதுவர் மீது குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் தற்காலிக பின்னடைவு – சீனா

கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, சிறிலங்கா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தும் நிகழ்வை மேற்கு நாடுகள் புறக்கணிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி  ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு அளிக்கும் விழா நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வை மேற்கு நாடுகளின் தூதுவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மோடியின் பாதுகாப்பு ஊடறுக்கப்படவில்லையாம் – இளவாலைச் சம்பவத்தை நிராகரிக்கிறது இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அவரது பாதுகாப்பு ஊடறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

மோடியின் யாழ். பயணம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத் தலையீடு – சீன ஆய்வாளர் குற்றச்சாட்டு

தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று, சீனாவின் சிந்தனையாளர் குழாமின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா – தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷல்

ஜெனரல் சரத் பொன்சேகா தென்காசியப் பிராந்தியத்தில் பீல்ட் மார்ஷலாக, பதவி உயர்த்தப்படும் நான்காவது இராணுவத் தளபதியாக இருப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.