மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவில் நிரந்தர தீர்வுக்கு இதுவே சந்தர்ப்பம் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

சிறிலங்காவின் மற்றொரு அமைச்சர் மட்டக்குழு சீனா பயணம் – உறவுகளைப் பலப்படுத்த முயற்சி

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவின் அமைச்சர் மட்டக் குழுவொன்று பீஜீங் சென்றுள்ளது.

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

பிரகீத் கடத்தல் – எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு, ஹோமகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய சீனாவுக்கும் சிறிலங்கா அழைப்பு

சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்துலக முதலீடுகள் மற்றும் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மதிப்புக்கூட்டு வரியை 15 வீதமாக அதிகரிக்கத் திட்டம்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்கூட்டு வரியை (VAT) 15 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நோட்டம் பார்க்க உயர்நிலைக் குழுவை அனுப்பியது சீனா

சிறிலங்காவுடன் மேலும் பரந்தளவிலானதும், ஆழமானதுமான இருதரப்பு உறவுகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக சீன அரசாங்கம் சிறிலங்காவுக்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது.

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு நட்பு, நம்பிக்கையின் அடிப்படையிலானது – ரஸ்யா

சிறிலங்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள், மக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் உண்மையான நட்புறவை அடிப்படையாகக் கொண்டது என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.

ஒரு சில நாடுகளுடன் மட்டும் உறவை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது – சிறிலங்கா அரசு

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது சிறிலங்காவை எதிர்த்த நாடுகள் உள்ளடங்கலாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தமக்குப் பக்கபலமாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார் நடேசன் – நேரில் கண்ட பெண் இரகசிய சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேரை பேருந்தில் சிறிலங்கா படையினர் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.