மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஜெனிவா தீர்மானம் இராஜதந்திர வெற்றியல்ல – என்கிறார் மகிந்த

ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது, சிறிலங்காவுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துடன் தன்னால் உடன்பட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய மகிந்தவின் தொலைபேசி அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படை உயர்அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் நடத்திய கூட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளினதும், காவல்துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் குறித்து மேலும் 3 மேஜர் ஜெனரல்களிடம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் மூன்று மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அனைத்துலகத்தை வெற்றி கொண்டு விட்டோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாகவே இராஜதந்திரங்களை வகுக்கின்றன, இந்தியப் பெருங்கடல் விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வராது என்று சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்தவைக் காப்பாற்றிவிட்டோம், படையினருக்கும் துரோகம் செய்யமாட்டோம் – ரணில் கூறுகிறார்

மகிந்த ராஜபக்சவை தூக்குக்கயிறில் இருந்து நாமே காப்பாற்றி விட்டோம், எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினருக்குத் துரோகம் இழைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

மின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சந்திரிகா படுகொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகளும், 40 சிவில் சமூக அமைப்புகளும், நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் வலுவானதாக தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளன.

தரைவழிப் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் – சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆலோசனை

தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும்  தரைவழி பாலம் மற்றும் கடலடிச் சுரங்கம் மூலம் இணைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆராயவுள்ளது.