மே 21இற்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம்
சிறிலங்கா அமைச்சரவை, வரும் மே 21ஆம் நாளுக்குப் பின்னர், மாற்றியமைக்கப்படவுள்ளதாக, நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டுக்குச் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும், அமைச்சரவையை மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விரைவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ, அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மறுத்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது தொடர்பாக தனக்கு ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.