மேலும்

மைத்திரியைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் சீனத் தூதுவர்

chinese-ambassador-msசிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது.

நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்த சீன தூதுவர், யி சியான்லியாங், சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சிறிலங்காவுக்கு  நிவாரணப் பணிகளில் உதவவும், மீள்கட்டுமானப் பணிகளில் உதவவும் சீனா விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சீனா முன்வந்துள்ளதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *