யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்களுக்கு பெரியளவில் ஏற்பாடு
இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களை, பெரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான தகவல்களை வெளியிட்ட அவர்,
வரும் மே 21 ஆம் நாள் வெசாக் கொண்டாட்டங்களை பெரியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு, யாழ். துரையப்பா விளையாட்டரங்கு தொடக்கம், நாகவிகாரை வரை வெசாக் வலயம் அமைக்கப்படும்.
வடக்கில் 12 விகாரைகளில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பல்வேறு இடங்களிலும், 61 தன்சாலைகள் அமைக்கப்படும். ஒன்பது சிரமதான நிகழ்வுகள், ஆறு சில் ஓதும் நிகழ்வுகள், 85 வெசாக் விளக்குகள், எட்டு வெசாக் விளக்கு போட்டிகள், பக்திப்பாடல், போதி பூஜைகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்தார்.