மேலும்

மூன்றாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிறைவு

Indo-Sri Lanka_Annual_Defence_Dialogue (1)புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றும் இன்றும் நடந்த பேச்சுக்களில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான சிறிலங்கா குழுவும், இந்தியப் பாதுகாப்புச் செயலர் மோகன் குமார் தலைமையிலான இந்தியக் குழுவும் பங்கேற்றிருந்தன.

இதில், இருதரப்பு நலன்களையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவாக்கவும் இணக்கம் காணப்பட்டது.

Indo-Sri Lanka_Annual_Defence_Dialogue (1)Indo-Sri Lanka_Annual_Defence_Dialogue (2)Indo-Sri Lanka_Annual_Defence_Dialogue (4)Indo-Sri Lanka_Annual_Defence_Dialogue (5)

அதேவேளை, புதுடெல்லியில் இந்தப் பேச்சுக்களுக்காக சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *