புஸ்வாணமாகியது மாத்தளைப் புதைகுழி வழக்கு
மாத்தளை மாவட்ட மருத்துவமனைக்குப் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், 1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை சிறிலங்கா காவல்துறையினர் நேற்று மாத்தளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த எலும்புக் கூடுகள் தொடர்பாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று சமர்ப்பித்த மரபணுப் பரிசோதனை அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து 150இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.
இவை 1988-89 காலப்பகுதியில், ஜேவிபி கிளர்ச்சியின் போது சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட ஜேவிபி உறுப்பினர்களுடையதாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போயுள்ள 13 பேரின் உறவினர்கள், இந்த எலும்புக்கூடுகளை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரியிருந்தனர்.