மேலும்

லண்டன் பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளர் நானல்ல – என்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

erik-solhaimசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நேற்று லண்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்பு இடம்பெற்றதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் வேறு யார் யார் பங்கெடுத்தார்கள் என்பது பற்றிய  அறிக்கை ஒன்று, பேச்சுக்களுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும்,  புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையில் லண்டனில் பேச்சுக்களை நடத்த தானே ஒழுங்கு செய்ததாக வெளியான செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *