மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் – மகிந்தவுக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
18வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் படி, தான் மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விளக்கம் கேட்டிருந்தார்.
சிறிலங்கா உயர்நீதிமன்றம் தனது விசாரணைகளை அடுத்து தமது பதிலை நேற்று சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியிருந்தது.
சிறிலங்கா உயர்நீதிமன்றம் அனுப்பிய பதில் என்னவென்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று மாலை வெளியிட்டார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றுவது தடவையும், அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம் என்றும், அதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.