நீதிமன்றில் நிறுத்தப்பட்ட பிள்ளையான்- விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இன்று கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட பிள்ளையானை சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான், இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
