ரணில் கைதுக்கு எதிராக வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்கள் இல்லை
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எந்த இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பல்வேறு நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அத்தகைய கருத்துக்கள் குறிப்பிடத்தக்க பொருத்தமற்றவை.
சிறிலங்காவில் சட்டம் சமமாகவும் நியாயமாகவும் அமுல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருகிறது.
சிறிலங்காவில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று முன்னர் கூறப்பட்டாலும், அத்தகைய நிலைமை இப்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
