சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு சேவை நீடிப்பு
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
ஜூலை 14ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 23 ஆவது கடற்படைத் தளபதியாக 2019 ஜனவரி 01ஆம் நாள் நியமிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நாளையுடன் ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.