மேலும்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த

Major General Jagath Rambukpothaசிறிலங்கா இராணுவத்தின்  புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரும் 21ம் நாளுடன் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக வரும் 22ம் நாள் முதல் மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்கும் போது, லெப். ஜெனரலாகப் பதவி உயர்வு அளிக்கப்படும்.

ஆட்டிலறிப் படைப்பிரிவு அதிகாரியான இவர், போரின் போது வன்னியில் 56வது  டிவிசன் கட்டளை அதிகாரியாகவும், ஆட்டிலறிப் படைப்பிரிவின் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *