மேலும்

ஜனநாயகத்துக்கு விரோத ஆட்சிக் கவிழ்ப்பு – மங்கள சமரவீர

சிறிலங்காவில் இன்று மாலை ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நிதியமைச்சரான மங்கள சமரவீர.

அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு விரோதமானது. சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *