மேலும்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் தோல்வி

20th-amendmentசிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும்,  அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் வகையிலும், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டவரைவை சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த திருத்தச்சட்ட வரைவு,  மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணசபை  நேற்று முன்தினம் இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு அங்கீகாரம் அளித்திருந்தது.

இன்று ஊவா மாகாணசபையின் அனுமதிக்காக, இந்த திருத்தச்சட்ட வரைவு முன்வைக்கப்பட்டது. இது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 5 உறுப்பினர்கள் மாத்திரம் ஆதரவு அளித்தனர். 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிததனர். 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *