சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்றும், அதையடுத்து, திலக் மாரப்பன அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மத்திய வங்கி பிணை முறி விற்பனை முறைகேடு தொடர்பாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று மதியம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
திலக் மாரப்பன சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபராவார். தற்போது அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சராக பதவியில் இருக்கிறார்.
தற்போதைய அரசாங்கத்தின் தொடக்கத்தில் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து, சர்ச்சை ஒன்றை அடுத்த பதவி விலகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.