மத்தல விமான நிலையத்தின் மீது இந்தியா ஆர்வம்?
மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இந்திய முதலீட்டாளர் ஒருவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இந்திய முதலீட்டாளருடன் பேச்சுக்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
மத்தல விமான நிலையத்துக்கு மாதம் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகிறது. ஆனால் வெறும் 4 மில்லியன் ரூபா மாத்திரமே வருமானம் கிடைக்கிறது. நாளொன்றுக்கு மூன்று விமானங்கள் மாத்திரமே, இங்கு வருகின்றன.
இதனால், ஆண்டுக்கு 360 மில்லியன் ரூபாவை அரசாங்கம், சீனாவிடம் பெறப்பட்ட கடனுக்காக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.