சிறிலங்கா வான்பரப்பில் பறந்த ஒளிரும் மர்மப்பொருள்
சிறிலங்காவின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்டவடிவத்திலான இந்த மர்மப் பொருள், ஒளிர்ந்து கொண்டிருந்ததாக இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்ட படங்களில், பிரகாசமான சதுர வடிவிலான நகரும் பொருளாக இது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மாவட்டங்களில் இந்த மர்மப் பொருள் நேற்று மாலை 7.15 மணியளவில் மேற்கு வானில் அவதானிக்கப்பட்டுள்ளது.