இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.