மத்திய வங்கி ஆளுனருக்கு நியமனக் கடிதம் வழங்கினார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கான நியமனக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கினார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்விலேயே, இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி சிறிலங்கா மத்திய வங்கியில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.