பௌத்த குருமார் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு – சிறிலங்கா உயர்நீதிமன்றம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பௌத்த குருமார் தொடர்பான ‘தேரவாதி கதிகாவத்’ சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பௌத்த பிக்குகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
இதன்படி, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.