புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
ஐ.நா பொதுச் சபையில் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாத அமர்வு, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும்.
ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட பேச்சாளர்களின் பட்டியலின்படி, இந்த பொது விவாத அமர்வில், 24ஆம் திகதி பிற்பகல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர், ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
அவர் தனது உரையில், சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மீட்சிக்கான முயற்சிகள் மற்றும் காலநிலை தொடர்பான நிலைப்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.