முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க நாடாளுமன்றில் பிரேரணை
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தையும், அந்தச் சட்டம் தொடர்பான பிற விதிமுறைகளையும் ரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு, இன்னமும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில், தேவாலயங்களில் உயிரிழந்தவர்கள், ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ (Heroes of Faith) அறிவிக்கப்படவுள்ளனர்.
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை,அரசாங்கம் உண்மையாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக, சிறிலங்காவில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.