மேலும்

துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை நாடு திரும்ப உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் – துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் நாளுக்கு முன்னதாக, நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்ற, துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டிருந்தது.

பலருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையும் நிலையில் அவர்கள் நாடு திரும்பவுள்ளார். ஏனையவர்கள், பணிகளை முடித்துக் கொண்டு, ஜனவரி 15ஆம் நாளுக்கு முன்னதாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *