மேலும்

கோத்தா, மகிந்தவுக்கு எதிராக போராட்டம்

தேர்தல் பரப்புரைக்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், அந்தக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் சங்கிலியன் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.

மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கியபடி அவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *