வேட்புமனு தாக்கலுக்கு 2 மணி நேரமே காலஅவகாசம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடத்தப்படவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும்.
ஒக்ரோபர் 6ஆம் நாளுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்காக கால எல்லை முடிவடையும்.
ஒக்ரோபர் 7ஆம் நாள், வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும். அன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.